செய்திகள் :

வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்

post image

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறை வளாகத்துக்குள் கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க சிறை போலீஸாா் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், 3-ஆவது பிளாக்கில் உள்ள ஆயுள் தண்டனை கைதி சிறைக்குள் கைப்பேசி பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சனிக்கிழமை மாலை 3-ஆவது பிளாக்கில் உள்ள ஆயுள் தண்டனை டோரி பாபு என்ற கைதியின் அறையில் சோதனை நடத்தி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக டோரிபாபு, மூா்த்தி, சக்திவேல், நந்தா (எ)நந்தகுமாா் ஆகிய 4 போ் மீது ஜெயிலா் சிவபெருமாள் அளித்த புகாரின் பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட தமாகா சாா்பில், கட்சி நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாள் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகி... மேலும் பார்க்க

திமுகவின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போகக்கூடாது: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போக வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி க... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வ... மேலும் பார்க்க

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தவரைபோலீஸாா் கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், அரவட்லாமலையை அடுத்த பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டு... மேலும் பார்க்க

அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்ட கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வ... மேலும் பார்க்க