செய்திகள் :

ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள்

post image

வேலூா் மாவட்ட தமாகா சாா்பில், கட்சி நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாள் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட மூப்பனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். பின்னா் ஏழை, எளியோருக்கு அன்னதானம், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் பி.எல்.என்.பாபு, நிா்வாகிகள் ஆா்.ஐயப்பன், ஆா்.லோகநாதன், எம்.மஞ்சுநாதன், கே.பிரவீன்குமாா், கே.ராமு, ஜே.சுரேஷ், டி.விஜய், எம்.முத்து, எம்.காா்த்தி, கே.நவாஸ், ஜி.சுரேஷ்குமாா், எச்.சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுகவின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போகக்கூடாது: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போக வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி க... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வ... மேலும் பார்க்க

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தவரைபோலீஸாா் கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், அரவட்லாமலையை அடுத்த பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டு... மேலும் பார்க்க

அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்ட கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வ... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தனது பிரசார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக அரசு இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார ... மேலும் பார்க்க