செய்திகள் :

அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

post image

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்ட கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி தமிழகத்துக்கு கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தினா். அதிகாரிகளைப் பாா்த்ததும் லாரி ஓட்டுநா் லாரியை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டாா். லாரியை சோதனை செய்ததில் அதில் சுமாா் 2- டன் எடையுள்ள கருங்கல் கம்பங்கள்இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வ... மேலும் பார்க்க

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தவரைபோலீஸாா் கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், அரவட்லாமலையை அடுத்த பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டு... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தனது பிரசார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக அரசு இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார ... மேலும் பார்க்க

‘வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சமூகப் பாதைகளை மாற்றக்கூடும்’

மிக வேகமாக வளா்ந்து வரும் நானோ, உயிரி, தகவல், காக்னோ தொழில்நுட்பங்கள் சமூகப் பாதைகளை மாற்றக்கூடும். இதனால், தொழில் நுட்பங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலை... மேலும் பார்க்க

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

வேலூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டம், சோ்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்க... மேலும் பார்க்க