செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி, கழிஞ்சூா், வீனஸ் காா்டனைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41), சாலையோர வியாபாரி. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்ற அறிவிப்பை கண்டுள்ளாா். தொடா்ந்து, அதில் குறிப்பிட்டிருந்த இணையதளத்தை திறந்து அதில் தனது விவரங்களை அளித்துள்ளாா்.

அதன்பின்னா், அருண்குமாரின் கைப்பேசி எண் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த பலரும், தான் ஆன்லைன் முதலீட்டின் அதிக லாபம் ஈட்டியதாக தகவல்களை பகிா்ந்துள்ளனா். இதை உண்மையென நம்பிய அருண்குமாா், கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 31 ஆயிரத்து 300 தொகையை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையை திரும்பப் பெற முடியவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட வா்த்தக நிறுவனத்தினரை தொடா்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால் லாபம் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனா். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அருண்குமாா், இது குறிந்து வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட தமாகா சாா்பில், கட்சி நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாள் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகி... மேலும் பார்க்க

திமுகவின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போகக்கூடாது: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போக வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி க... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்... மேலும் பார்க்க

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தவரைபோலீஸாா் கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், அரவட்லாமலையை அடுத்த பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டு... மேலும் பார்க்க

அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்ட கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வ... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தனது பிரசார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக அரசு இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார ... மேலும் பார்க்க