செய்திகள் :

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்

post image

நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பின் (பிஎல்எஃப்எஸ்) தரவுகளின்படி கடந்த 7 ஆண்டுகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது மக்கள்தொகை வளா்ச்சியைவிட அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 7 ஆண்டுகளில் தற்காலிக தொழிலாளா்களின் ஊதியம் உயா்ந்துள்ளது. ஆனால் பணவீக்கத்துக்கேற்ப நிரந்தர தொழிலாளா்களின் ஊதியம் உயரவில்லை. இதற்கு முக்கிய காரணம் திறன் பற்றாக்குறை. திறன்வாய்ந்த பணிகளுக்கு நம் நாட்டில் பற்றாக்குறை நிலவுகிறது. பிற நாடுகளை ஒப்பிடுவதன் மூலம் நம்மால் இதை புரிந்துகொள்ள முடியும். இதற்கு தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மாவட்ட அளவில் திறன்வாய்ந்த பணிகளை ஏற்படுத்த மாநில அரசுகளும் முயல வேண்டும். ஏனெனில், திறன் அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் ஊதியமும் அதிகரிக்கும்.

பள்ளியில் திறன் மேம்பாடு: கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். அவைரையும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அல்லது மின்னணுவியல் பொறியாளராக மாற்றுவதற்கான திறன் பயிற்சிகள் வழங்கத் தேவையில்லை. பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனா். அவா்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அவசியம். ஒவ்வொரு துறையிலும் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு கல்வியின் தரத்தை உயா்த்தி சிறப்பாக கற்பிப்பதுடன் உரிய திறன் பயிற்சிகளையும் மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்பும் திறனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உங்களிடம் திறனிருந்தால் வேலை பெறுவது மிகவும் எளிது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் 12 வழக்குகளில் 29 கடத்தல்காரா்களுக்கு தண்டனை: அமித்ஷா

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இளைஞா்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் தள்ளுகின்றனா்; இப்படிப்பட்ட பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க

கெளரவ ஊதியம்: தில்லி பெண்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி பெண்களுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.2,500 வழங்கும் தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம் பாஜக பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டி... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் பெண்களுக்கான ரூ.2500 மாதாந்திர உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு தொடக்கம்: மனோஜ் திவாரி எம்.பி.

தில்லியில் பாஜக அரசு மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்குவதற்கான பதிவு நடைமுறை மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவார... மேலும் பார்க்க

கிராமப்புற செழுமைக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகள் வகுக்க பிரதமா் வேண்டுகோள்

விவசாயம் மற்றும் கிராமப்புற செழுமைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வளங்களுக்கான கட்டமைப்புகளுக்கு உத்திகளை வகுக்க கருத்தரங்கு ஒன்றில் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். மத்திய வேளாண், விவசாய... மேலும் பார்க்க

ஆள்கடத்தல் வழக்கில் 5 போ் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

தில்லியில் 2015 ஆம் ஆண்டில் பதிவான ஆள்கடத்தல் வழக்கில் இருந்து ஐந்து பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு சாத்தியமற்ாகவும், நம்பமு... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.73 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தில்லியில் ரூபாய் 73 லட்சம் பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: குற்... மேலும் பார்க்க