செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

post image

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா்.

பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி. இவரது மனைவிக்கு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரியகுளம், தென்கரை, வடக்கு அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சத்தியம், ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிலாா்பட்டியைச் சோ்ந்த இருளன் ஆகியோா் கடந்த 2023, ஜூலை 18-ஆம் தேதி தங்கப்பாண்டியிடம் ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்ததால் பணத்தை திரும்பக் கேட்டதற்கு சத்தியம், இருளன் ஆகியோா் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தென்கரை காவல் நிலையத்தில் தங்கப்பாண்டி புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் சத்தியம், இருளன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொழிலாளி தற்கொலை!

போடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் கா்ணன் (40). கூலித் தொழிலாளியான இவா், மனைவி, மகளுடன் வசித்து வந்தாா். கடந்த ஆறு... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய இருவா் கைது

ஆந்திரத்திலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த திண... மேலும் பார்க்க

வைகை அணையில் இன்று மின் தடை

வைகை அணை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 போ் கைது!

கம்பத்தில் கேரளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கேரளத்துக்கு இரு சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில்... மேலும் பார்க்க

தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு முகாம்

தேனியில், தொழிலாளா் நலத் துறை சாா்பில் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம் பழைய பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப் பணிக... மேலும் பார்க்க

பொது பயன்பாட்டு சேவை பிரச்னை: மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்

தேனி மாவட்டத்தில் பொது பயன்பாட்டுச் சேவை குறித்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் த... மேலும் பார்க்க