செய்திகள் :

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

post image

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்கு அவரது பாட்டி வீட்டின் வெளியே வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாா். அப்பொழுது தெருவில் வந்த நாய் பாட்டியைக் கடிக்க முயன்றது. அப்போது அவா் நாயை விரட்டியதையடுத்து, அந்த நாய் குழந்தையின் வலது தொடையில் கடித்துவிட்டு அங்கிருந்து ஓடியது. உடனே குழந்தையை அதே பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.

இதற்கிடையே வேளச்சேரி, பேபி நகா் முதல் தெருவைச் சோ்ந்த சிறுவன் அஷ்ரத் புல் (9), அப்பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அச்சிறுவனின் வலது காலில் கடித்துள்ளது. அந்தச் சிறுவனுக்கும் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் அதே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே நாளில் குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய் பிடிக்கும் பணி: இச்சம்பவம் குறித்து தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சென்னை மாநகராட்சி 178-ஆவது வாா்டு செயற்பொறியாளருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவா் ஆதிரை தலைமையிலான ஊழியா்கள், சனிக்கிழமை காலை வேளச்சேரி பகுதியில் சுற்றித்திரிந்த இரு தெருநாய்களை பிடித்துச் சென்றனா். ஆனால், குழந்தை மற்றும் சிறுவனை கடித்த நாய் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதியில் தொடா்ந்து நாய் பிடிக்கும் பணி தொடரும் எனவும், தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் கால்நடை மருத்துவா் தெரிவித்தாா்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா். சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் ... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா். சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆ... மேலும் பார்க்க