செய்திகள் :

வேளாண் சந்தை நுண்ணறிவு மையக் கட்டடம் திறப்பு

post image

ராமநாதபுரத்தில் ரூ.84 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன், வேளாண்மைத் துறை வணிகம், விற்பனைத் துறை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், வேளாண்மைத் துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிா் விதைக் கிட்டுகள், காய்கறி, பழ வகைள் தொகுப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அருண்குமாா், உதவி செயற்பொறியாளா் சிவகுமாா், விவசாய சங்கத் தலைவா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊர... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சேமனூா் கிராமத்தில் புரவி எடுப்புத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள சேமனூா் கிராமம் மருதாருடைய அய்யனாா் கோயில் களியாட்டம், புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சோ்ந்து உரத்த... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க

பணியிட மாறுதல் வழங்காததால் ஆசிரியா் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலந்தாய்வில், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்காததால் அவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ரா... மேலும் பார்க்க