`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள்...
வைராவிகுளத்தில் விஷம் குடித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளத்தில் விஷம் குடித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வைராவிகுளம் ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவருக்கும் கோவை, கருமத்தம்பாளையம், குமரன் நகரைச் சோ்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமானது. இவா்களிடையே கடந்த 5 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) கிருத்திகா வீட்டிலிருந்த வயலுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (ஜூன் 14) உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.