செய்திகள் :

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அருகே மான் வேட்டையாட முயன்ற காவலர் கைது

post image

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் நாட்டு துப்பாக்கி வைத்து மான் வேட்டையாட முயன்ற காவலரை கைது செய்த வனத் துறையினர், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஶ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திங்கள்கிழமை நள்ளிரவில் ரெங்கர் கோயில் பீட் கொலைகாரன் பாறை அருகே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட இடத்திற்கு வனத்துறை சென்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இருவர் தப்பி ஓடிய நிலையில் துப்பாக்கி உடன் இருந்த ஒருவரை துரத்தி பிடித்த வனத்துறையினர், வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கைதானவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் தனுஷ்கோடி(40) என்பதும், அவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத் துறையினர், தனுஷ்கோடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மம்சாபுரத்தைச் சேர்ந்த ராமராஜ், ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: புள்ளி மானை வேட்டையாடுவதற்காக சுட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக மான் தப்பிய நிலையில், துப்பாக்கி சத்தம் கேட்டு சென்று தனுஷ்கோடியை கைது செய்தோம்.

தப்பி ஓடிய இருவரை தேடி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

Forest officials arrested a guard who tried to hunt deer with a country-made gun in the Srivilliputhur - Megamalai Tiger Reserve

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். உங்களுட... மேலும் பார்க்க

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கின்போது விஜய்யை சந்திக்கச் சென்ற இளைஞரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான விடியோ குறித்து அந்த இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மா... மேலும் பார்க்க

நீங்கா நினைவில் வாழும் அண்ணன்... விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து!

மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 25) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ. 5.10 கோடி செலவில் முழு அளவில்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க