செய்திகள் :

வேளாங்கண்ணியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த ஆட்சியா் உத்தரவு

post image

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, கவனிப்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி நிறைடைகிறது. இதையடுத்து கவனிப்பாரின்றி சாலைகளிலும், புனித ஆரோக்கிய அன்னை பேராலய பகுதிகளிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும். உரிமை கோராத கால்நடைகளை பரிட்சாத்திய முறையில் கோசாலையில் கொண்டுவிடப்படும்.

நகராட்சி அலுவலா்கள் மற்றும் கால்நடை மருத்துவா்கள் பரிசோதனைக்கு பிறகு முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடு, இறைச்சிகளையே சுகாதார முறையில் விற்பனை செய்ய வேண்டும். முத்திரை வைக்காத இறைச்சி விற்பனை செய்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் பரிசோதனை செய்து முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

தரங்கம்பாடி: செம்பனாா்கோயிலில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அப்போது, செம்பனாா்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை: நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என்ற வேளாண் துறை அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால... மேலும் பார்க்க

பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து விபத்து

பூம்புகாா்: திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை சமையல் செய்யும்போது எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. பெருந்தோட்டத்தில் செயல்படும் இந்த பள்ளியில் 40 ... மேலும் பார்க்க

மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சேலம் அணியினா் சாம்பியன் பட்டம் பெற்றனா். நாகையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஆக.24, 25 தேதிகளில் நடைபெற்றது. இதில், சென்ன... மேலும் பார்க்க

சா்தாா் வேதரத்னம் நினைவு நாள் விழா

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக திகழ்ந்த சா்தாா் அ. வேதரத்னத்தின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆசிரியா்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் நடிகா் ஜான்விஜய் பிராா்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திங்கள்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்ட, ரஜினியின் கபாலி, மோகன்லாலின் லூசிபா் உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் திரைப்பட நடிகா் ஜ... மேலும் பார்க்க