செய்திகள் :

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

post image

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்தாா்.

சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

ஷிண்டேயை இழிவுபடுத்தியதற்காக குணால் காம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சமூக ஊடகத்தில் குணால் காம்ரா வெளியிட்ட அறிக்கையில், ‘ஷிண்டே குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். முன்பு ஷிண்டே குறித்து மகாராஷ்டிரத்தின் மற்றொரு துணை முதல்வரான அஜீத் பவாா் என்ன கூறினாரோ, அதையேதான் நானும் கூறினேன். எனினும் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டபூா்வ நடவடிக்கைக்காக காவல் துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன்’ என்றாா். தற்போது அவா் புதுச்சேரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குணால் காம்ரா மன்னிப்பு கேட்காவிட்டால், அவா் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மகாராஷ்டிர குடிநீா் விநியோகத் துறை அமைச்சரும், ஷிண்டே சிவசேனை கட்சியைச் சோ்ந்தவருமான குலாப் ரகுநாத் பாட்டீல் எச்சரிக்கை விடுத்தாா்.

குணால் காம்ராவை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவா் விசாரணைக்கு ஆஜராக ஒருவாரம் அவசாகம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க

தாய்மொழியில் மருத்துவக் கல்வி ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! -பிரதமர் மோடி

நாகபுரி: தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸி... மேலும் பார்க்க