செய்திகள் :

ஷ்ரேயாஸைக் கிண்டல் செய்த ரோஹித் சர்மா..! வைரல் விடியோ!

post image

ரோஹித் சர்மா செய்த குறும்புத்தனமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரைப் போன்று முன்னாள் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா நடந்துசென்று அவரைக் கட்டிப்பிடிப்பார்.

இந்த விடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் இந்தக் குறும்புத்தனமான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டியில் தோல்வியடைந்த பிறகும் இப்படியான குறும்புத்தனங்களை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

நேரடி இறுதி ஆட்ட வாய்ப்பு: பஞ்சாப் - பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்கும். தோற்கும் அ... மேலும் பார்க்க

திக்வேஷ் ரதியை அவமதித்த ரிஷப் பந்த்: அஸ்வின்

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை கடுமையாக விமர்சித்து அஸ்வின் பேசியுள்ளார். நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் லக்னௌ வீரர் ரன் அவுட் செய்தார். இதனை லக்... மேலும் பார்க்க

முல்லான்பூரில் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள்..! பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள்!

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே.27) நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் (குவாலிஃபயர் 1, எலிமினேட்டர்) பஞ்சாபின் முல்லான்பூரில் நடைபெறவிருக்கின்றன. இந்தியா... மேலும் பார்க்க

ஆர்சிபிக்காக 9,000 ரன்கள்: ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதமடித்து சாதித்த விராட் கோலி!

ஐபிஎல் தொடரில் அதிகமாக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.விராட் கோலி ஐபிஎல் தொடரில் 265 போட்டிகளில் 8,606 ரன்கள் குவித்துள்ளார். இதில் 63 அரைசதங்கள், 8 சதங்களும் அ... மேலும் பார்க்க

எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணா... நெகிழ்ச்சியாகப் பேசிய ஜிதேஷ் சர்மா!

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்சிபி வீரர் அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். கடந்தாண்ட... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ஆர்சிபி..! ஈ சாலா கம் நம்தே நிஜமாகுமா?

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் யாருமே செய்யாத சாதனையை ஆர்சிபி நிகழ்த்தியுள்ளது. 2008-ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அணிக்கு 7 போட்டிகள் வெளியேவும் 7 போட்டிகள் சொந்த மண்ணிலு... மேலும் பார்க்க