செய்திகள் :

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

post image

நெல்லை: திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் இன்று பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.

விழாவைத் தொடங்கி வைத்து, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். பிறகு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், வாக்குறுதி கொடுப்பது திமுகவினர் வழக்கம், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அதனை மறப்பதுதான் பழக்கம் என்று கூறினார்.

மீனவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்றீர்களே, பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே, மின் கட்டணத்தைக் குறைப்போம் என்றீர்களே, எரிவாயு சிலிண்டர் விலைக் குறைப்போம் என்றீர்களே ஸ்டாலின் அண்ணாச்சி கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று திமுக அளித்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர். திமுக ஆட்சி குடும்ப ஆட்சி, பாஜக ஆட்சியோ மக்களுக்கான ஆட்சி. 29 காவல்நிலைய மரணங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழக முதல்வரோ சாரி என்று சொல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்கிறது. ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் ... மேலும் பார்க்க

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிகார் மாநிலம் ராஜ்கிரில் 29.8.2025 முதல் 7.9.2025 வரை நடைபெற உள்ள ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025ஐ தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று அறிமுகப்படுத்தினார்.ஹீரோ ஆ... மேலும் பார்க்க

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!

நெல்லை: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் வரும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.வரும் சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார். திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள்... மேலும் பார்க்க

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவ... மேலும் பார்க்க

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெ... மேலும் பார்க்க