செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், மிளா, கரடி, புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை தடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நாட்டுத் துப்பாக்கி

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை கொலைகாரன் பாறை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்து மான் வேட்டையாட முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் தனுஷ்கோடியை வனத்துறையினர் கைது செய்தனர். மற்றும் அவரது நண்பர்களான மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவர் தப்பித்து ஓடிய நிலையில், இருவரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமை காவலர் தனுஷ்கோடியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் காவல்துறையினரே குற்ற செயல்களில் ஈடுபட்ட சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத... மேலும் பார்க்க

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்... மேலும் பார்க்க

UP வரதட்சணை கொடுமை: "அம்மா மீது தீ வைத்தனர்" - குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிர்ஷா என்ற இடத்தில் வசிப்பவர் விபின். இவரது மனைவி நிக்கி. இவர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரையும்... மேலும் பார்க்க

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க