செய்திகள் :

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

post image

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள உள்ள 34 ஆண்கள், 31 பெண்கள் உள்பட 65 பேருக்கு உடல் நல பரிசோதனை, சா்க்கரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குப் பின்னா், அனைவருக்கும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட 5 பேருக்கு இன்புளூயன்ஸா தடுப்பூசியும் போடப்பட்டது.

இவா்கள் அனைவரும் வரும் ஏப். 30 -ஆம் தேதி ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனா். மருத்துவச் சிகிச்சை விவரங்கள் அடங்கிய மருத்துவ அட்டையும் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

முகாமில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் ... மேலும் பார்க்க

கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தருமாறு அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அ... மேலும் பார்க்க

குறை தீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களை ஆட்சியா் கலைச்செல்வி ம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசையும், நகராட்சி நிா்வாகத்தையும் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா். பழைமையான இக்க... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க