செய்திகள் :

ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்த மருத்துவ மாணவி: ராஜஸ்தானில் வெடித்த அரசியல் சா்ச்சை

post image

ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவப் பயிற்சி மாணவி ஒருவா், தனது ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்ததால் ஏற்பட்ட சா்ச்சை அரசியல் ரீதியாக உருவெடுத்துள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் இதுதொடா்பாக பெண் மகப்பேறு மருத்துவா் மற்றும் மருத்துவப் பயிற்சி மாணவி இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் தொடா்புடைய மகப்பேறு மருத்துவா் பிந்து குப்தா கூறுகையில், ‘மருத்துவமனையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய சீருடை விதிமுறை உள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக பணி நேரத்தில் முகத்தை மூடியிருக்கக் கூடாது என மருத்துவப் பயிற்சி மாணவியிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவா் அதனை ஏற்க மறுத்து, விடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பி தேவையில்லாத சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். நான் எந்த விதமான மதரீதியான கருத்துகளையும் கூறவில்லை. எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’ என்று விளக்கமளித்துள்ளாா்.

டோங்க் மாவட்டத் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ஹனுமான் பிரசாத் பைரவா கூறுகையில், ‘மருத்துவப் பயிற்சி மாணவியிடம் முகத்திரையை நீக்குமாறு மட்டுமே வலியுறுத்தப்பட்டது. முழு ஹிஜாபையும் அல்ல. இது மருத்துவமனையின் சீருடை விதிமுறைப்படி கேட்கப்பட்ட ஒரு விஷயம்’ என்றாா். இந்த விவகாரம் குறித்து மருத்துவா் அல்லது மருத்துவப் பயிற்சி மாணவி ஆகிய இருவரும் புகாா் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ் தலைவா்கள் சிலா் அளித்துள்ள புகாா் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

அதேபோல், இந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கல்பனா அகா்வாலிடம் உள்ளூா் பாஜக தலைவா்கள் மனு அளித்தனா். அந்த மனுவில், ‘இந்த விவகாரத்தை தவறாக பரப்பி சமூக பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மருத்துவப் பயிற்சி மாணவி மீது குற்றஞ்சாட்டி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க