செய்திகள் :

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

post image

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த ஏற்கெனவே மாநில அரசால் இருமுறை அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவையனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் ஹிந்தி எதிர்ப்பு எதிரொலித்ததால், பாஜக அரசு எடுத்துள்ள தற்காலிக நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

ஏனெனில், பள்ளிகளில் மொழி கொள்கை வகுக்க ’நரேந்திர ஜாதவ் கமிட்டி’ என்ற நிபுணர் குழுவையும் அமைத்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.

“இந்த கமிட்டி, மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஏற்கெனவே மாஷேல்கர் கமிட்டி சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்வதுடன், அதனை எதிர்ப்போர் தரப்பிடமும் ஆலோசித்து கருத்துகளைக் கேட்டு அதன்பின், அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கும். அதன்பேரில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மகராஷ்டிர மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், ‘அனைத்து ஆங்கில வழி மற்றும் மராத்தி வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்’ என்று ஆணையிட்டிருந்தது. அதன்பின் எழுந்த கடுமையான எதிர்ப்புகளால், மேற்கண்ட உத்தரவு மாற்றப்பட்டு ‘ஹிந்தியை விருப்ப மொழியாக கற்பித்தால் போதுமானது’ என்று கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

Anti-Hindi backlash: Maharashtra's three-language policy being withdrawn - CM Fadnavis

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க