செய்திகள் :

ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வதும் திணிப்புதானே: ஹெச். ராஜா

post image

ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வதும் திணிப்பு தானே எனக் கேள்வி எழுப்பினாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஹிந்தித் திணிப்பு என்கிறாா்களே, அதைப் படிக்கக் கூடாது என்பதும் திணிப்புதானே. திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா்க் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பாா்களா என்றாா்.

விசாரணை ஒத்திவைப்பு: கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினாா் ஹெச். ராஜா. இதற்காக அவா் மீது 8 பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இவ்வழக்கு புதுகை குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக ஹெச். ராஜா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். வழக்கு விசாரணையை வரும் ஏப். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 2... மேலும் பார்க்க

திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.

திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம். புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வ... மேலும் பார்க்க

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க