செய்திகள் :

ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

post image

ஹிமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஹிமாசலில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்துவருகின்றது. மேக வெடிப்புகளால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் காங்க்ரா, சிர்மௌர் மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உனா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், சம்பா, சோலன், சிம்லா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, குடியிருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை எச்சரித்துள்ளது. ஜூலை 5 முதல் 9 வரை மாநிலத்தில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டியின் சிம்லா மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்தது, அதே நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அகார் மாவட்டத்தில் 7 செ.மீ, அதைத் தொடர்ந்து, சாராஹான் மற்றும் சிம்லாவில் தலா 4 செ.மீ, மழைப் பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மண்டி மாவட்டத்தின் செராஜ் மற்றும் தரம்பூர் பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அங்குப் பல மேக வெடிப்புகள் வீடுகள், வயல்கள், உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியுள்ளன. நடந்து வரும் பேரழிவில் குறைந்தது 110 பேர் காயமடைந்ததாக அவர் கூறினார்.

ஒரு குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கையாக, வீடுகள் அடித்துச்செல்லப்பட்ட, மோசமாக இடிந்துவிழந்த வீடுகள் உள்ளிட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து மாதத்திற்கு ரூ.5,000 வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

The India Meteorological Department has issued a red alert for very heavy rain in Himachal Pradesh.

இந்தியா, டிரினிடாட்-டொபேகோ இடையே 6 ஒப்பந்தங்கள்: பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா மற்றும் டிரினிடாட் - டொபேகோ இடையே உள்கட்டமைப்பு, மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் டிரினிடாட் - டொபேகோ நாட... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் ஆா்ஜென்டீனா பயணத்தை நினைவுகூா்ந்த காங்கிரஸ்: பிரதமா் மோடி மீது விமா்சனம்

லத்தீன் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு கடந்த 1968-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி பயணித்ததையும், இருநாடுகள் இடையிலான ஆழமான உறவுக... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தல்: இருவரை கைது செய்தது என்ஐஏ

‘டங்கி ரூட்’ எனப்படும் சட்டவிரோதமான வழிமுறையில் அமெரிக்காவுக்கு இந்தியா்களைக் கடத்திய இரு முகவா்களை தேசிய புலனாய்வு முகமையினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனா். ஹிமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தின் தா்மசா... மேலும் பார்க்க

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு: சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்

கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தொடா்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி ... மேலும் பார்க்க

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!

இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் ... மேலும் பார்க்க