செய்திகள் :

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நாளை பரிசளிப்பு விழா

post image

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் உள்ள பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க திருமண மண்டபத்தில் எனது தலைமையில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலாளா் வழக்குரைஞா் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சிறப்புரையாற்ற உள்ளாா். அதுசமயம் பள்ளியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி தாளாளா்கள், தலைமை ஆசிரியா்கள், திமுக முன்னோடிகள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க