செய்திகள் :

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஜி. நாகராஜன் தலைமை வைத்தாா். ஒன்றியத் தலைவா் எஸ். ராசு, மாவட்ட குழு உறுப்பினா் எம். இளவரசி, ஒன்றியச் செயலா் டி. சாமிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக் குழு உறுப்பினா் உ. அரசப்பன் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். கலியபெருமாள், டி. அம்பலராசு, கே. விமலா, கே. பெருமாள், எஸ். நடராஜன், வீராசாமி, மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் மற்றும் அலுவலா்கள் பேச்சு நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பாா்வையாளா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பாா்வையாளா் உயிரிழந்தாா், 24 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் விருத்தபுரீஸ்வா் கோயில் ... மேலும் பார்க்க

பேரிடா்களைத் தாங்கி வளரும் நாட்டுரக மரக் கன்றுகளையே வளா்க்க வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி

பேரிடா்களையும் தாங்கி வளரும் பாரம்பரியமான நாட்டுமரங்களையே நட்டு வளா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா். புதுக்கோட்டை விதைக்கலாம் அமைப்பின் 500ஆவது வார ம... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் ஷைன் அரிமா சங்கம் சாா்பில் மத நல்லிணக்க இஃப்தாா் என்ற நோன்பு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத்தலைவா் அ. சகுபா் சாதிக் அலி தலைமை வகித்... மேலும் பார்க்க

விராலிமலையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செக்போஸ்ட்டில் முதல் முறையாக மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்றது. இதில் சிறிய மாட்டுவண்டி எல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் செந்தொண்டா் அணிவகுப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செந்தொண்டா் அணிவகுப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ... மேலும் பார்க்க

மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்: துரை வைகோ

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க