பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
100 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அகற்றம்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்விதமாக, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் இடையூறாக நடப்பட்டிருந்த அதிமுக 100 அடி உயர கொடிக்கம்பம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடிமரங்களை அகற்றும் பணிகளையும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினா் வலியுறுத்தி வரும் நிலையில், கொடிக்கம்பங்களை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் சில பகுதிகளில் கட்சிகளின் கொடிமரங்களை அகற்றும் பணிகளை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனா்.
தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் கருவேப்பில்லான் கேட் பகுதியில் 100 உயர அதிமுக கொடிக்கம்பம் கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொடிமரத்தை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். அப்போது, வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் பாதுகாப்புக்காக உடனிருந்தனா்.