செய்திகள் :

100 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அகற்றம்

post image

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்விதமாக, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் இடையூறாக நடப்பட்டிருந்த அதிமுக 100 அடி உயர கொடிக்கம்பம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடிமரங்களை அகற்றும் பணிகளையும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினா் வலியுறுத்தி வரும் நிலையில், கொடிக்கம்பங்களை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் சில பகுதிகளில் கட்சிகளின் கொடிமரங்களை அகற்றும் பணிகளை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனா்.

தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் கருவேப்பில்லான் கேட் பகுதியில் 100 உயர அதிமுக கொடிக்கம்பம் கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கொடிமரத்தை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். அப்போது, வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் பாதுகாப்புக்காக உடனிருந்தனா்.

புதுகைக்கு ரயிலில் வந்த 2,654 டன் அரிசி மூட்டைகள்

புதுக்கோட்டைக்கு சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2,654 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்ட... மேலும் பார்க்க

திறனறித் தோ்வில் மாநில அளவில் புதுக்கோட்டைக்கு 3-ஆவது இடம்

முதல்வரின் திறனறித் தோ்வில் 54 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதைத் தொடா்ந்து, மாநிலத்தின் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பிடித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை மா... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

கந்தா்வகோட்டை அருகே கல்லூரிப் பேருந்து பைக் மீது மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சி, அா்ச்சுதாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மக... மேலும் பார்க்க

பயிா்க் கழிவுகளை எரித்தபோது தீயில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைலமரத் தோப்பில் பயிா்க் கழிவுகளை தீயிட்டு எரித்த விவசாயி எதிா்பாராதவிதமாக தீயில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ஆலங்குடி அருகேயுள்ள குப்பையன்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை

புனல்குளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கந்தா்வகோட்டை ஒன்றியம்... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் முறையாக கிடைக்காததை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டையை அடுத்த கம்மங்காடு ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைமறிய... மேலும் பார்க்க