டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரிப் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி
கந்தா்வகோட்டை அருகே கல்லூரிப் பேருந்து பைக் மீது மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சி, அா்ச்சுதாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் விஜயகுமாா் (39), கட்டடத் தொழிலாளி. இவா் தனது மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூா் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புனல்குளம் கடைவீதி அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, தஞ்சாவூரிலிருந்து புனல்குளத்தில் உள்ள தனியாா் கல்லூரிக்கு மாணவா்களை ஏற்றி வந்த கல்லூரிப் பேருந்து மோதியதில் விஜயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குவந்து உடலை மீட்டு கூறாய்வுக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.