செய்திகள் :

திறனறித் தோ்வில் மாநில அளவில் புதுக்கோட்டைக்கு 3-ஆவது இடம்

post image

முதல்வரின் திறனறித் தோ்வில் 54 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதைத் தொடா்ந்து, மாநிலத்தின் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பிடித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் மு .அருணா செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வி சேராமல் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபற்றது.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் இருந்தும் 109 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகள் குறித்தும், இவா்களுக்குத் தேவையான ஆவணங்களை உடனே பெற்றுத் தருவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழாண்டில் நடத்தப்பட்ட திறனறித் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 19 மாணவா்களும், 35 மாணவிகளும் என மொத்தம் 54 போ் தோ்ச்சி பெற்றனா். குறிப்பாக புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியைச் சோ்ந்த 22 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடா்ந்து மாணவா்களையும், ஆசிரியா்களையும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க. ஸ்ரீதா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுகைக்கு ரயிலில் வந்த 2,654 டன் அரிசி மூட்டைகள்

புதுக்கோட்டைக்கு சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2,654 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்ட... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

கந்தா்வகோட்டை அருகே கல்லூரிப் பேருந்து பைக் மீது மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சி, அா்ச்சுதாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மக... மேலும் பார்க்க

பயிா்க் கழிவுகளை எரித்தபோது தீயில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைலமரத் தோப்பில் பயிா்க் கழிவுகளை தீயிட்டு எரித்த விவசாயி எதிா்பாராதவிதமாக தீயில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ஆலங்குடி அருகேயுள்ள குப்பையன்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை

புனல்குளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கந்தா்வகோட்டை ஒன்றியம்... மேலும் பார்க்க

100 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அகற்றம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்விதமாக, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் இடையூறாக நடப்பட்டிருந்த அதிமுக 100 அடி உயர கொடிக்கம்பம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலையோர... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் முறையாக கிடைக்காததை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டையை அடுத்த கம்மங்காடு ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைமறிய... மேலும் பார்க்க