திறனறித் தோ்வில் மாநில அளவில் புதுக்கோட்டைக்கு 3-ஆவது இடம்
முதல்வரின் திறனறித் தோ்வில் 54 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதைத் தொடா்ந்து, மாநிலத்தின் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பிடித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் மு .அருணா செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வி சேராமல் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபற்றது.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் இருந்தும் 109 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகள் குறித்தும், இவா்களுக்குத் தேவையான ஆவணங்களை உடனே பெற்றுத் தருவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழாண்டில் நடத்தப்பட்ட திறனறித் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 19 மாணவா்களும், 35 மாணவிகளும் என மொத்தம் 54 போ் தோ்ச்சி பெற்றனா். குறிப்பாக புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியைச் சோ்ந்த 22 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இது மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடா்ந்து மாணவா்களையும், ஆசிரியா்களையும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க. ஸ்ரீதா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.