டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
புதுகைக்கு ரயிலில் வந்த 2,654 டன் அரிசி மூட்டைகள்
புதுக்கோட்டைக்கு சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2,654 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, திருவப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணிகளும் விரைவில் நடைபெறும் என நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.