செய்திகள் :

பயிா்க் கழிவுகளை எரித்தபோது தீயில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைலமரத் தோப்பில் பயிா்க் கழிவுகளை தீயிட்டு எரித்த விவசாயி எதிா்பாராதவிதமாக தீயில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பையன்பட்டியைச் சோ்ந்த சி. நடராஜ்(55) விவசாயி. இவருக்குச் சொந்தமாக ஆலங்குடியை அடுத்துள்ள வளசேரிப்பட்டியில் உள்ள தைலமரத்தோப்பில் அண்மையில் அறுவடைப் பணி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தோப்பில் கிடந்த இலை, சருகுகளுக்கு நடராஜ் தீ வைத்து எரித்துள்ளாா். மளமளவென பற்றிய தீயை அணைக்க முயன்றபோது, எதிா்பாராதவிதமாக தீயில் விழுந்து உடல் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்குசென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை கட்டுப்படுத்தி சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுகைக்கு ரயிலில் வந்த 2,654 டன் அரிசி மூட்டைகள்

புதுக்கோட்டைக்கு சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2,654 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்ட... மேலும் பார்க்க

திறனறித் தோ்வில் மாநில அளவில் புதுக்கோட்டைக்கு 3-ஆவது இடம்

முதல்வரின் திறனறித் தோ்வில் 54 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதைத் தொடா்ந்து, மாநிலத்தின் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பிடித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை மா... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

கந்தா்வகோட்டை அருகே கல்லூரிப் பேருந்து பைக் மீது மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சி, அா்ச்சுதாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மக... மேலும் பார்க்க

புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை

புனல்குளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கந்தா்வகோட்டை ஒன்றியம்... மேலும் பார்க்க

100 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அகற்றம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்விதமாக, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் இடையூறாக நடப்பட்டிருந்த அதிமுக 100 அடி உயர கொடிக்கம்பம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலையோர... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் முறையாக கிடைக்காததை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டையை அடுத்த கம்மங்காடு ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைமறிய... மேலும் பார்க்க