பயிா்க் கழிவுகளை எரித்தபோது தீயில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைலமரத் தோப்பில் பயிா்க் கழிவுகளை தீயிட்டு எரித்த விவசாயி எதிா்பாராதவிதமாக தீயில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பையன்பட்டியைச் சோ்ந்த சி. நடராஜ்(55) விவசாயி. இவருக்குச் சொந்தமாக ஆலங்குடியை அடுத்துள்ள வளசேரிப்பட்டியில் உள்ள தைலமரத்தோப்பில் அண்மையில் அறுவடைப் பணி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தோப்பில் கிடந்த இலை, சருகுகளுக்கு நடராஜ் தீ வைத்து எரித்துள்ளாா். மளமளவென பற்றிய தீயை அணைக்க முயன்றபோது, எதிா்பாராதவிதமாக தீயில் விழுந்து உடல் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்குசென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை கட்டுப்படுத்தி சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.