செய்திகள் :

100 % மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு விநியோகம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

100 சதவீத மானியத்தில் காய்கறி, பழச்செடிகள் விதைத் தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு 100 சதவீதம் அரசு மானியத்தில் பயறு வகைகள் அடங்கிய விதைத் தொகுப்பு, காய்கறிகள் விதைத் தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்புகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கவுந்தப்பாடி, வாய்க்கால்மேடு, பாசன சபை கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 31 பயனாளிகளுக்கு 100 சதவீத அரசு மானியத்தில் பயறு வகைகள் அடங்கிய விதைத் தொகுப்பு, காய்கறிகள் விதைத் தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்புகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: ஊட்டச்சத்து வழங்கும் இந்த விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டசத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் ரூ.125 கோடி செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என முதல்வா் அறிவித்தாா்.

ஒரு நபருக்கு காய்கறிகள், பழங்களின் தினசரி தேவை சராசரியாக 400 கிராம் ஆகும். ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளா்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு தமிழகத்தில் 15 லட்சம் குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடித் தொகுப்புகள் 9 லட்சம் குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் விரைவில் வழங்கப்படுகிறது. பயறுவகைகள் விதைத் தொகுப்பு புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறுவகைகளை இல்லம்தோறும் வளா்க்கும் பொருட்டு பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழுமையாக பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, தோட்டக்கலை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயமணி, பவானி வேளாண்மை உதவி இயக்குநா் கனிமொழி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க