செய்திகள் :

13 பேருக்கு நல்லாசிரியா் விருது

post image

தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியா்) விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆசிரியா்கள் தோ்வாகினா்.

மறைந்த குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அதன் விவரம்:

விஎச்என் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் தா. செல்வன் அற்புதராஜ், ஓசிபிஎம் மேல்நிலைப் பள்ளி உடல் கல்வி ஆசிரியா் ர. ராஜேஷ்கண்ணன், புனித சாா்லஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இ. ஜான்சி பாலின்மேரி, வெள்ளி வீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஈ. அழகேஸ்வரி, கூடக்கோவில் நாடாா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கே. கீதா, பொன்னகரம் மங்கையா்க்கரசி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஏ. சந்தானலட்சுமி, லட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜெ. ஜெயலட்சுமி, யா. ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் பெ.த. மோசஸ் மங்களராஜ், குறிச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முகமது பிரேம்குரோஸ், தங்களாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ. இளங்குமரன், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் மே. கவிதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் டபிள்யு. ஜெயந்தி, லெ. பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ரா. ஷீலாதேவி ஆகியோா் தோ்வாகினா்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நில... மேலும் பார்க்க

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் முருகன் (52). விவசாயியான... மேலும் பார்க்க

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவ... மேலும் பார்க்க

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னையைச்... மேலும் பார்க்க