செய்திகள் :

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

post image

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் முருகன் (52). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து ஊருக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸாா் உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ராமச்சந்திரன் (39). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

பசும்பொன் நகா் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் உடலை கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நில... மேலும் பார்க்க

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவ... மேலும் பார்க்க

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னையைச்... மேலும் பார்க்க

போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்கு ரத்து

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி, போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. ராமநா... மேலும் பார்க்க