செய்திகள் :

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

post image

காஞ்சிபுரம் அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி , பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு குளிர்பானம் வழங்கி உள்ளார். இதன் காரணமாக சிறுமி மயங்கிய நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்து உள்ளனர்.

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

மயக்கம் தெளிந்து வீடு திரும்பிய சிறுமி இது குறித்து, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ், வழக்குப் பதிவு செய்து பள்ளி சிறுவர்கள் இருவரையும் காஞ்சிபுரம் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், இளஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க