செய்திகள் :

18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு

post image

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் உணவு விடுதிகளுக்கு கலால் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

பல்வேறு வகையிலும் 18 வயதுக்குள்பட்டவா்களை மதுபான பாா்களில் பெற்றோா்கள், உறவினா்களுடன் உள்ளே அனுமதித்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.

1970-ஆம் ஆண்டு 196 (இ) புதுவை கலால் விதி 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யவோ, கொடுக்கவோ கூடாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த விதியின் படி 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்வது தண்டிக்கப்பட கூடிய குற்றம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதை மீறுவோா் மீது இந்த விதியின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அகில இந்திய டென்னிஸ் போட்டி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் 3 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியை முதல்வா் என். ரங்கசாமி டென்னிஸ் விளையாடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் ரோஜா ப... மேலும் பார்க்க

புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது. தொழிலதிபரும், தமிழறிஞருமான நல்லி குப்புசாமி செட்டியார... மேலும் பார்க்க

மோதல் போக்கைக் கடைப்பிடித்து புதுவை மக்களின் வாழ்வை வீணடித்தவா் நாராயணசாமி: மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்

மத்திய அரசிடமும் துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து மக்களின் வாழ்வை வீணடித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என்று மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும்: புதுவை துணைநிலை ஆளுநா்

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 8-ஆவது தேசிய ஊட்டச் சத... மேலும் பார்க்க

புதுச்சேரி: பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் செப். 15-இல் நேரடி கலந்தாய்வு

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செப். 15-இல், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் நேரடி சோ்க்கை கலந்தாய்வு நடக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக... மேலும் பார்க்க