செய்திகள் :

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் திறன்பெற்ற தொழிலாளா்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், செஞ்சி, மரக்காணம், திசையன்விளை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனாா்கோவில், தா.பழூா், திருஉத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கயம், குருக்கள்பட்டி, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூா், பேரூா், காரிமங்கலம் ஆகிய 19 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்பயிற்சி நிலையங்களையும், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம், கடலாடி ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

சிங்காரவேலா் ஓய்வு இல்லம்: தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டன. சென்னை அண்ணா நகா், திருப்பூா் மாவட்டம் தொட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட தொழிலாளா் துறை அலுவலகக் கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலா் ஓய்வு இல்லத்தையும் அவா் திறந்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கா், சி.வெ.கணேசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழிலாளா் நலத் துறைச் செயலா் கொ.வீரராகவ ராவ், ஆணையா் சி.அ.ராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க