+2 பொதுத் தேர்வு: முதல் முறையாக கணினியில் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி
தமிழகம் முழுவதும், அரசுப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் எம். ஆனந்தன் கணினி வழியாக பொதுத் தேர்வை எழுதுகிறார்.
எம். ஆனந்தன் முதல் முறையாக கணினி மூலம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி வருவதாகவும், அண்ணா மேல்நிலைப் பள்ளி சிறப்பு மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் திருவள்ளுவர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.