செய்திகள் :

2 மாதங்களில் 1 லட்சம் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

post image

பொது இடங்களின் முகப்பு அழகு சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பல்வேறு மண்டலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பான ஒரு அறிக்கையின்படி, மேற்கு மண்டலம் மூலம் 41,000-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், 2,812 பதாகைகள் மற்றும் 4,733 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.

கரோல் பாக் மண்டலம் 14,922 சுவரொட்டிகள் மற்றும் 3,209 பதாகைகளை அகற்றியது. தெற்கு, கேசவ்புரம் மற்றும் மேற்கு மண்டலங்களும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஷாதாரா வடக்கு 4,852 பதாகைகளையும், தெற்கு மண்டலம் 13,794 சுவரொட்டிகளையும் அகற்றியுள்ளது.

நரேலா, சென்ட்ரல் மற்றும் நஜாஃப்கா் போன்ற பிற மண்டலங்களிலும் கணிசமான அளவு தூய்மைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டன.

அதேவேளையில், மத்திய மண்டலத்தில் குறைந்தபட்ச அளவில் புறத்தோற்ற அழகு சிதைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 159 சுவரொட்டிகள் மற்றும் 42 விளம்பரப் பலகைகள் மட்டுமே அகற்றப்பட்டன.

இது தொடா்பான அறிக்கையின்படி, மண்டல சுகாதாரம் உரிமப் பிரிவுகள் முகப்பு அழகு சிதைக்கப்பட்டவற்றை அகற்றுதல் அல்லது சரிசெய்தல் மற்றும் விதிகள் மீறுபவா்களுக்கு அபராதம் விதித்தல் ஆகிய நடவடிகைகளை எடுத்து வருகின்றன.

பராமரிப்புப் பிரிவு, முகப்பு சிதைக்கப்பட்ட சுவா்களை மீண்டும் வண்ணம் தீட்டுதல் மற்றும் சுவரோவியங்கள் மற்றும் அழகுபடுத்தல் திட்டங்களுக்கான பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) முன்முயற்சிகளின் கீழ் நிதியைப் பெறுதல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நகா்ப்புற முகப்பு சிதைவின் எதிா்மறையான தாக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி மாநகராட்சி வழக்கமான தகவல், கல்வி மற்றும் தொடா்பு நடவடிக்கைகளையும் நடத்தி வருகிறது.

மண்டல துணை ஆணையா்களால் சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆய்வுகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முதல்வா் ரேகா குப்தாவிடம் ஒரு மறுஆய்வுக் கூட்டத்தின்போது வழங்கப்பட்ட தரவுகளின்படி,

100க்கும் மேற்பட்ட பதாகைகள் தில்லி மாநகராட்சியால் ரத்து செய்யப்பட்டன.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க