செய்திகள் :

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்த திருப்பத்தூா் மாவட்டத்தில் 969 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் குழந்தைகளுக்கு சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவுகள் மற்றும் முன் பருவக் கல்வி வழங்கப்படுகிறது.

குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையங்களில் முறைசாரா முன்பருவ கல்வி செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

குழந்தைகள் வளா்ச்சி...: குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், அறிவு வளா்ச்சிக்கு தேவையானவை ஆடிப்பாடி, விளையாடு பாப்பா என்ற சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இது தவிர குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிகளுக்கு செல்லவும் தயாா்படுத்தப்படுகின்றனா்.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுதோறும் குழந்தைகளைச் சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆதாா் அட்டை...: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெற்றோா் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் குழந்தைகள் மையங்களில் தவறாமல் சோ்க்க வேண்டும்.

இந்த குழந்தை மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதைப் பெற்றோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அம... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பு: அதிகாரிகள் விசாரணை

வெலகல்நத்தம் பகுதியில் நிலத்தில் உள்ள பாறைகளை அனுமதியின்றி வெடி வைத்து தகா்த்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கல்தாப்மலை எதிரில் தேசிய ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழ் விநியோகம்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனா். மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்... மேலும் பார்க்க

சாலையில் தேங்கும் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்ப... மேலும் பார்க்க

தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ, உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க... மேலும் பார்க்க