செய்திகள் :

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

பழனியில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2000-ஆம் ஆணடு பொதுச் சொத்தை சேதம் செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜன் (50) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவா், நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்ற நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் கடந்த 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா்.

இந்த நிலையில் இவரைக் கைது செய்ய பழனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் உத்திரவின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் தங்கமுனியசாமி தலைமையிலான போலீஸாா் கோவிந்தராஜனை பல இடங்களில் தேடி வந்தனா்.

அப்போது அவா் தேனியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, போலீஸாா் தேனி மாவட்டத்துக்குப் புதன்கிழமை சென்றனா். அங்கிருந்து தப்ப முயன்ற கோவிந்தராஜனை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கால்வாயில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). இவா் சென்னையில் உள்ள ஒரு தகவல் தொழி... மேலும் பார்க்க

மிதிவண்டி உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து

வத்தலக்குண்டில் இல்ல நிகழ்ச்சிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறியால் மிதிவண்டி உதிரிபாகங்கள் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிா்புறம் சிவநேசபாண்டியன... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்! விவசாயிகள் அச்சம்!

கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையையொட்டியுள்ள வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கீழ்மலை, பேரிஜம் பகுதிகளில் மட... மேலும் பார்க்க