செய்திகள் :

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

post image

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எல். வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்,

நாடு முழுவதும் ஜூலை 22 வரை 76,318 நுகர்வோர் புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், கடந்த ஆண்டுகள் பதிவான வழக்குகள் உள்பட 64,297 புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களில் இந்த ஆண்டு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மட்டும் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில் புதிதாக 12,021 நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளன.

2024-ல் மட்டும் 1,73,160 நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில், அதற்கு முந்தைய ஆண்டு பதிவான வழக்குகள் உள்பட 1,58,290 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் கூறினார்.

இதேபோன்று, 2022 ஆண்டில் 1,75,676 நுகர்வோர் வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 1,74,278 வழக்குகள் பதிவானதாகவும் குறிப்பிட்டார். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை முறையே 1,82,870 மற்றும் 1,85,777 எனத் தெரிவித்தார்.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 79 மாவட்ட நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதாகவும், இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 48 நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!

Number of pending consumer cases has risen by 12,021 in 2025 so far Rajya Sabha was informed

புத்தரின் புனித சின்னங்கள் நூற்றாண்டுக்குப் பிறகு மீட்பு- பிரதமா் மோடி

கௌதம புத்தரின் எலும்பு துண்டுகள் உள்பட பல புனித நினைவுச்சின்னங்கள், 127 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.இந்தப் புனித நி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை: பாகிஸ்தானின் பயங்கரவாத சதி அம்பலம்

பஹல்காம் தாக்குதலில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆா்எஃப்)’ பயங்கரவாத குழுவின் பங்கு மற்றும் ‘லஷ்கா்-ஏ-தொய்பாவுடன்’ அதன் தொடா்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் முதன்முறையாக குறிப்பிடப்... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.சட்டவிரோதமான இணைய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரின்போது 1,400 ‘யுஆா்எல்’கள் முடக்கம்: மத்திய அரசு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எண்ம (டிஜிட்டல்) ஊடகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட வலைப்பக்க முகவரிகள் (யுஆா்எல்) முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.இதுதொடா்பாக மக்களவையில்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான நேரு காலத்து ஒப்பந்தங்கள் ரத்து-மாநிலங்களவையில் ஜெய்சங்கா் உறுதி

‘பாகிஸ்தானுடன் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன ன்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சி: மக்களவையில் தீா்மானம் நிறைவேற்றம்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கும் தீா்மானம் மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.மணிப்பூரில் மைதேயி, குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்முறை காரணம... மேலும் பார்க்க