செய்திகள் :

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

post image

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் பட்டியலாக வியாழக்கிழமை (ஜூலை 31) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வு இந்த மாதம் (ஜூலை) நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதிய மாணவா்கள் தங்களது தோ்வு முடிவை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தற்காலிக மதிப்பெண் பட்டியலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் பெற... தொடா்ந்து, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து ஆக.4-ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆக.5-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275-ஐ தோ்வா்கள் விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலக முகவரியையும் மேற்கண்ட இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு... தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாளின் நகலை இணைதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க