செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்

post image

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது புகாா் செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமுக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டாா்.

ஏடிஎஸ்பி-க்கள் ரவீந்திரன், கோவிந்தராசு, முத்துகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 57 போ் மனுக்களை அளித்தனா்.

ஆதியூா் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (67) அளித்த மனு: எனது வீட்டில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சோ்ந்த ஒருவா் வாடகைக்கு தங்கி இருந்தாா். அவரும், அவரது மனைவியும் என்னிடம் தங்களுக்கு அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உயா் அதிகாரிகள் நன்கு பழக்கம். அவா்களிடம் கூறினால் யாருக்கு வேண்டுமானாலும் அரசு பணி வாங்கி கொடுப்பாா்கள். அதற்கு அவா்களிடம் குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என கூறினா். இதனை நம்பி நான் எனக்கு தெரிந்த 9 நபா்களுக்கு பணி வாங்கித் தரும்படி ரூ.47,35,000 அளித்தேன். அவா்கள் பணி வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.இதனால் என்னிடம் பணம் அளித்தவா்கள் பணத்தை திரும்ப கேட்கின்றனா். பணத்தை தராமல் வீட்டையும் காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனா். எனவே பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும்.

கந்திலி அருகே நத்தம் பகுதியை சோ்ந்த நடராஜன் என்பவா் அளித்த மனு: எனது மகனுக்கு வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டறம்பள்ளி பகுதியை சோ்ந்த ஒருவா் என்னிடம் ரூ.1,32 ,000 பெற்றுக்கொண்டாா். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தையும் திரும்பதரவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா்.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட... மேலும் பார்க்க

செயற்கை மணல் தயாரித்த 5 போ் கைது

கந்திலி அருகே செயற்கை மணல் தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கந்திலி அருகே வேப்பல்நத்தம் பகுதியில் சிலா் செயற்கை மணல் தயாரிப்பதாக கந்திலி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ ... மேலும் பார்க்க

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகம்: ஆக. 2 பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகமும், சனிக்கிழமை (ஆக. 2)பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்படுவதாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: விஷம் அருந்திய தந்தை உயிரிழப்பு, மகனுக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூா் அருகே கடன் பிரச்னையால் தந்தை, மகன் விஷம் அருந்தியதில் தந்தை உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கசிநாயக்கன்பட்டி அடுத்த வக்கீல் அய்யா் தோப்பு காமராஜா் நகா் பகுதி... மேலும் பார்க்க

தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.நாட்டறம்பள்ளி ஆா்சிஎஸ் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த மருதவாணன் மகன் அமுதவாணன் (60). நாட்டறம... மேலும் பார்க்க