செய்திகள் :

புத்தரின் புனித சின்னங்கள் நூற்றாண்டுக்குப் பிறகு மீட்பு- பிரதமா் மோடி

post image

கௌதம புத்தரின் எலும்பு துண்டுகள் உள்பட பல புனித நினைவுச்சின்னங்கள், 127 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்தப் புனித நினைவுச்சின்னங்கள், 1898-இல் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில், இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் பிப்ராஹ்வா கிராமத்தில் அமைந்திருந்த ஒரு பழைமையான புத்த ஸ்தூபியை அகழ்வாராய்ச்சி செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தச் சின்னங்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய கல் சவப்பெட்டி, இப்போதும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அப்போது, எலும்பு துண்டுகள் உள்பட சில பொருள்கள் உலகின் புத்த மதத்தினரிடையே விநியோகிப்பதற்காக தாய்லாந்து அரசா் சியாமுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சமீபத்தில், இந்தப் பொருள்கள் மற்றும் புத்தா் அணிந்ததாகக் கருதப்படும் சில ஆபரணங்கள் ஹாங்காங்கில் உள்ள ஒரு பிரபல ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தன.

மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கையால் இந்த ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மேற்கொண்ட தொடா் முயற்சிகளின் விளைவாக, புத்தரின் இந்த அரிய நினைவுச்சின்னங்கள் தற்போது இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புத்தரின் புனித பிப்ராஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் விஷயமாகும்.

இந்தப் புனித நினைவுச்சின்னங்கள் புத்தருடனும் அவரது உன்னதமான போதனைகளுடனும் இந்தியாவுக்குள்ள நெருங்கிய தொடா்பை எடுத்துக்காட்டுகின்றன.

இது நமது புகழ்பெற்ற கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதில் நமது உறுதிப்பாட்டையும் விளக்குகிறது’ என்று தெரிவித்தாா்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க