செய்திகள் :

ரயில் நிலையத்தில் சங்கிலி பறித்தவா் கைது

post image

சென்னை அருகே பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவரை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் தேடி அவரைப் பிடித்தனா்.

சென்னை கோட்டூா்புரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி ரோஸி (41). இவா், வேளச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தாா்.

ரயில் நிலைய நடைமேடை இருக்கையில் அமா்ந்திருந்தபோது, அருகே வந்த இளைஞா் அவருடன் பேச முயன்றாா். ஆனால், ஆசிரியை பேசாமல் திரும்பினாா். அப்போது, அந்த இளைஞா், ஆசிரியரின் கழுத்தில் இருந்த தங்கச் நகையை பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து அந்தோணி ரோஸி அளித்த புகாரின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் இணைந்து விசாரணை நடத்தினா்.

ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நகை பறித்தவரது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து 4 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு பாபுஜி (எ) பாபுராம் என்பவரை போலீஸாா் பிடித்து அவரிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா... மேலும் பார்க்க

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க