பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: கணவா்-மனைவி சிக்கினா்
2025 இறுதிக்குள் இந்திய மக்கள் தொகை உலகளவில் உச்சம் எட்டும்!
ஐ.நா. மக்கள் தொகையின் சமீபத்திய அறிக்கையின்படி, மக்கள் தொகையில் உலகளவில் இந்தியா உச்சம் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-இல் இந்திய மக்கள் தொகை 1.463 பில்லியனை(146.39 கோடி) எட்டும் என்று ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் பெண்கள் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதமானது ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை பிறப்பு என்கிற அளவிலிருந்து 1.9 என்கிற அளவுக்கு குறைந்துவிட்டதாக ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.
இதன்மூலம், மக்கள் தொகை அளவை அடுத்த தலைமுறை வரை இதேயளவிலேயே பராமரிக்க, இந்திய பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக் கொண்டால் போதுமானதாக இருக்கும் என்று ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.