வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்
மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.157.02 கோடி கடனுதவி: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்
திருவண்ணாமலை மாவட்ட மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், 19 ஆயிரத்து 555 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.157.02 கோடி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.
சென்னை கலைவாணா் அரங்கில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், சுய உதவிக்குழு தினத்தையொட்டி வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கினாா்.
இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு மகளிா் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், பெருங்கடன்களுக்கான காசோலைகளை வழங்கினா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசுகையில், மகளிா் திட்டம் சாா்பில் கிராமப்புற மகளிா் வாழ்வு மேம்பட சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளும், இதற்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதை பெண்கள் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றாா்.
விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மற்றும் நகா்ப்புற இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் கீழ் 1,815 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 19 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு ரூ.157.02 கோடி பெருங்கடன்கள், வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.