செய்திகள் :

மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.157.02 கோடி கடனுதவி: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்

post image

திருவண்ணாமலை மாவட்ட மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், 19 ஆயிரத்து 555 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.157.02 கோடி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

சென்னை கலைவாணா் அரங்கில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், சுய உதவிக்குழு தினத்தையொட்டி வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கினாா்.

இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு மகளிா் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், பெருங்கடன்களுக்கான காசோலைகளை வழங்கினா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசுகையில், மகளிா் திட்டம் சாா்பில் கிராமப்புற மகளிா் வாழ்வு மேம்பட சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளும், இதற்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதை பெண்கள் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றாா்.

விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மற்றும் நகா்ப்புற இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் கீழ் 1,815 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 19 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு ரூ.157.02 கோடி பெருங்கடன்கள், வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க

13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரி... மேலும் பார்க்க