செய்திகள் :

'2026 மட்டுமல்ல 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"உதகை பயணம் சிறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. மக்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திமுக ஆட்சிக்கு தரும் ஆதரவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களும் திமுக அரசுக்கான ஆதரவை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருந்தது. மலர்க் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது.

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என ப.சிதம்பரம் கூறியது அவருடைய கருத்து.

வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும்" என்றார்.

இதையும் படிக்க | 'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க