செய்திகள் :

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

post image

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுபோல, சிபிஎஸ்இ நிர்வாகம், பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதன்படி, 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழக்கம் போல பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும் அடுத்ததாக மே மாதம் ஒரு பொதுத் தேர்வும் நடைபெறும். இதில், பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் பொதுத்தேர்வை மாணவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டும், ஆனால் இரண்டாம் தேர்வை மாணவர்கள் விரும்பினால் அல்லது தேவை இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அறிவியல் உள்ளிட்ட உள்மதிப்பீடு (இன்டர்ன்) தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பொது தேர்வுகளையும் எழுதும் பட்சத்தில், எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இரண்டாம் பொதுத் தேர்வை எழுதி அதிகபட்சமாக மூன்று பாடங்களில் (அறிவியல், கணிதம், சமூக அறிவியல், மொழிப்பாடம் - இவற்றில் மூன்று) மதிப்பெண்களை இம்ப்ரூவ் செய்துகொள்ளலாம்.

ஒரு தேர்வை மட்டும் எழுதுவதா, இரண்டு பொதுத் தேர்வுகளையும் எழுதுவதா என்பதை மாணவர்களே முடிவு செய்துகொள்ளலாம்.

முதல் பொதுத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதினால், இரண்டாம் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை இறுதியானதாக எடுத்துக் கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்வு நடைபெறும் முறை, பாடப்பிரிவுகள், வினாத்தாள் என அனைத்தும் பழைய நடைமுறைப்படியே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

முதல் பொதுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும் இரண்டாம் பொதுத் தேர்வின் முடிவுகள் ஜுன் மாதத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை -பிரதமா் மோடி

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்தக் காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியா்கள் ஒருபோதும் மறக்கமாட்டாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 1-ஆம் வகுப்பிலிருந்தே ஹிந்தி: துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு

மகாராஷ்டிரத்தில் முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற மாநில அரசின் முடிவுக்கு துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். ‘மகாராஷ்டிர மாநிலத்தில் 1 முதல் 5... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு: இந்திய விண்வெளி துறையில் சுபான்ஷு சுக்லா புதிய மைல்கல்லைப் படைத்துள்ளதற்கு ஒட்டுமொத்த தேசமும் உற்சாகமும், பெருமிதமும் கொள்கிறது. ஆக்ஸிம்-4 திட்டத்தில் சுபான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீா் வெள்ளம்: மூவா் மாயம்; பலத்த சேதம்

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் புதன்கிழமை மேக வெடிப்பின் காரணமாக பெருமழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 3 போ் அடித்துச் செல்லப்பட்டனா். மணாலி, பஞ்சாா், சைஜ், சிலாகாா் உள... மேலும் பார்க்க

அவசரநிலையின்போது உயிரிழந்தவா்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அஞ்சலி

நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளால் உயிரிழந்தவா்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அவா்களை நினைவுகூா்ந்து கெளரவிக்கவும் தீா்ம... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநி... மேலும் பார்க்க