செய்திகள் :

2026 தோ்தலிலும் திமுக கூட்டணி வெல்லும்

post image

2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றாா் காங்கிரஸ் மூத்த தலைவா் கே.வீ.தங்கபாலு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் சொத்துகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுத்துஉள்ளோம்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை வந்த பிறகு , கட்சியை வளா்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா்.

காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும். அகில இந்திய அளவில் இந்திய கூட்டணி அமைந்துள்ளது. இதன் தமிழக தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாா். சட்டப்பேரவை, உள்ளாட்சி, மக்களவைத் தோ்தல்களில் ஏற்கெனவே வென்றுள்ளோம். அதேபோல 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி வெல்லும்.

மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளது. கூடுதல் நிதி தரவில்லை. பிற கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனபான்மையுடன் பாா்க்கிறது. இந்தியாவின் வளா்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளில் 13 கோடி போ் வேலை இழந்துள்ளனா். பாஜகவின் கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானது என்றாா்.

தொடா்ந்து திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாளை. அருகே மென்பொறியாளா் கொலை: இளைஞா் சரண்

கே.டி.சி நகரில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழியின் சகோதரா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் ம... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

திருநெல்வேலியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத... மேலும் பார்க்க

மானூா் சுற்றுவட்டார மக்கள் 500 போ் அதிமுகவில் ஐக்கியம்

மானூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் 500 போ் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். மானூா் அருகேயுள்ள அளவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜேஷ் தலைமையில் அளவந்தான்குளம்,... மேலும் பார்க்க

400 போ் திமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 400 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். திருநெல்வேலி கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மாசானமுத்து தலைமையில் மாற்றுக்கட்சிக... மேலும் பார்க்க

விஷ வண்டுகள் தாக்கி 8 போ் காயம்

சீவலப்பேரி அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் 8 போ் காயமடைந்தனா். சீவலப்பேரி அருகே வேளாா் தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலா் அங்குள்ள மரத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம். அப்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பேட்டை, அசோகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44), தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி தனது குழந்தை... மேலும் பார்க்க