செய்திகள் :

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர்ந்து உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

இதனிடையே, ”நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார்.

அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(மே 29) செய்தியாளர்களைச் சந்தித்து, ”அன்புமணிதான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணிதான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை, ஆதாரப்பூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது எனது தவறு தான். தவறு செய்தது அவர் அல்ல, நான்தான்” என்று அவர் பேசினார்.

இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை( மே 30) முதல் மூன்று நாள்களுக்கு கட்சி நிர்வாகிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. மாவட்டந்தோறும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாளை முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

அன்புமணியின் அடுத்த நகர்வு குறித்து 3 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்திற்கு பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை அன்புமணி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: நேபாளத்தில் 18வது குடியரசு நாள்: மன்னராட்சி ஆதரவாளர்கள் பேரணி!

கேரள கப்பல் விபத்து: 22 தமிழக கடலோர கிராமங்கள் பாதிப்பு!

கேரள கப்பல் விபத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 22 கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரள கடல்பகுதியில் கடந்த மே 24 ஆம் தேதி, லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்குக் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் யார்? ராமதாஸ் - அன்புமணி போட்டி!

பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருவர் நியமிக்கப்பட்டதால் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது.பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக கி. லோகநாதன், இன்று (மே 31) முதல் நியமனம் செ... மேலும் பார்க்க

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

சென்னை: பாமக அலுவலக முகவரியை கட்சித் தலைவர் அன்புமணி மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, பாமகவில், கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு வெடித்து விஸ்வரூபம் எடுத்த... மேலும் பார்க்க

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்

கரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில்... மேலும் பார்க்க

அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!

சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடு... மேலும் பார்க்க

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க