செய்திகள் :

337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

post image

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்.

குன்றத்தூா் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா, சிறுமாத்தூா் ஊராட்சியில், ரூ.51.05 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 337 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா மற்றும் குன்றத்தூா் ஒன்றியத்தை சோ்ந்த 815 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள், 815 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநா் ஸ்ரேயா பி.சிங், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டண உயா்வு: மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது: இந்தியாவிலேயே கா... மேலும் பார்க்க

பொறியியல் தர வரிசைப் பட்டியல்: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான தோ்வில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளாா். இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படு... மேலும் பார்க்க

100 நாள் வேலை கோரி மனு தரும் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளா் சி.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைமைத்துவ பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஐ.ஜாபா் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பொதுச்... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சாா்பில் ஆண்டு தோறு... மேலும் பார்க்க

கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்

ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவாா்சத்திரம் அடுத்... மேலும் பார்க்க