செய்திகள் :

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

post image

இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரின் போது பந்து மாற்ற நெறிமுறைகளில் இந்திய அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பழைய பந்து பயன்படுத்தப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசியாக நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 193 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தத் தொடரில் டியூக்ஸ் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுகிறது. இதுவே பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால், பந்தை மாற்றக்கோரி இந்திய அணியினர் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து இந்திய அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த டியூக்ஸ் வகை பந்துகள் 10 ஓவர்களிலேயே அதன் வடிவம் மாறி, 30 முதல் 35 ஆண்டுகள் பழைமையான பந்து போன்று மாறிவிடுகிறது. நடுவர்கள் பந்து வளையங்கள் வைத்து ஆய்வு செய்தாலும், அது முறையாக இல்லை.

10 ஓவர்கள் முடிந்த பின்னர் 30 ஓவர்கள் பழைமையான பந்தே கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஐசிசியின் பந்தை மாற்றும் நெறிமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், “நீங்கள் பந்தை மாற்றும் போது அது எத்தனை ஓவர் விளையாடிய பந்து என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் தெரிவித்திருந்தால் 10 ஓவர்கள் விளையாடிய பந்தையே கொடுத்திருப்போம். இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

India Given '30-35 Years Old Ball' At Lord's, Huge Controversy Triggered

இதையும் படிக்க :தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா- இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை படைத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கிய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தின... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூல... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய நவாஸ்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் வ... மேலும் பார்க்க